/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் ஆட்டோ திருட்டு: போலீஸ் விசாரணை
/
போடியில் ஆட்டோ திருட்டு: போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 28, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோடி : போடி சுப்பிரமணியர் கோயில் மேற்கு தெருவை சேர்ந்தவர் பாசித் 37. ஆட்டோ டிரைவர்.
இவர் 15 நாட்களுக்கு முன்பு இரவில் ஆட்டோவை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்துள்ளார்.
காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ காணாமல் போனது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பாசித் புகாரில் போடி டவுன் போலீசார் காணாமல் போன ஆட்டோவை தேடி வருகின்றனர்.