/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் பூத்துள்ள பிரம்ம கமலப் பூக்கள்
/
போடியில் பூத்துள்ள பிரம்ம கமலப் பூக்கள்
ADDED : ஜூன் 07, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: ஆண்டிற்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூத்துக் குலுங்கும் பிரம்ம கமலப் பூவானது பகலில் வாடி விடும். பிரம்மாவுக்கு உகந்தாக கருதப்படுகிறது. பூக்கள் விரியும் போது வெளியேறும் நறுமணம் கவரும் வகையில் இருக்கும்.
பூவின் உட்புறத்தில் பல நாகங்கள் உள்ளது போலவும், பிரம்மன் அமர்ந்து இருப்பதை போல தெரியும். குலாலர் பாளையத்தில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவர் வீட்டில் பிரம்ம கமலப் பூ செடி (நிஷகாந்தி) வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இவரது வீட்டில் ஒரே செடியில் 10 க்கும் மேற்பட்ட பிரம்ம கமல பூக்கள் பூத்து இருந்தது.