sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சமுதாய சுய உதவிக்குழு அலுவலகங்களில் திருட்டு

/

சமுதாய சுய உதவிக்குழு அலுவலகங்களில் திருட்டு

சமுதாய சுய உதவிக்குழு அலுவலகங்களில் திருட்டு

சமுதாய சுய உதவிக்குழு அலுவலகங்களில் திருட்டு


ADDED : ஆக 19, 2024 12:56 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராமகிருஷ்ணாபுரம், கதிர்நரசிங்கபுரம் ஊராட்சிகளுக்கு சொந்தமான சமுதாய சுய உதவி குழு அலுவலக கட்டடங்களில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.

கதிர்நரசிங்கபுரம் ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய சுய உதவி குழு அலுவலக கட்டடம் அம்மாபட்டி ரோடு அருகே செயல்படுகிறது. இங்கு பயிற்றுனராக இருந்த ஸ்ரீதேவி ஆகஸ்ட் 5 முதல் அலுவலக பணிகள் தொடர்பாக ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று விட்டார். ஆகஸ்ட் 7ல் ஊராட்சிச் செயலாளர் கட்டடத்திற்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அலுவலக பயன்பாட்டிற்கு உரிய 3 பேட்டரிகள், யு.பி.எஸ்., சிப் ஆகிய உபகரணங்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. ஊராட்சிச் செயலாளர் வேல்முருகன் புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கான சமுதாய சுய உதவி குழு கட்டடம் கொழுஞ்சிபட்டி செல்லும் ரோட்டில் செயல்படுகிறது. இங்கு பயிற்றுநராக பணியாற்றி வந்த நாகஜோதி ஆகஸ்ட் 13 ல் அலுவலகத்தில் சென்று பார்த்தபோது ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள அலுவலக பயன்பாட்டிற்கான 3 பேட்டரிகள், யு.பி.எஸ்., ஆகியவை திருடு போயிருந்தது. ஊராட்சி தலைவர் பழனியம்மாள் புகாரில், ராஜதானி போலீசார் இரு திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us