sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 மீது வழக்கு

/

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 மீது வழக்கு

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 மீது வழக்கு

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 மீது வழக்கு


ADDED : மே 01, 2024 08:02 AM

Google News

ADDED : மே 01, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : வட்டிக்கு பணம் வாங்கிய பெண்ணின் கடையை அடித்து நொறுக்கி, வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகைகளை தூக்கிச் சென்ற 4 பேர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி உசையப்பா தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி 62. பெட்டிக்கடை நடத்தி வந்தார். தொழில் அபிவிருத்திக்காக, தேவதானப்பட்டியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் மூலம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த அவரது நண்பர் பால்பாண்டியிடம் ஆறு மாதத்திற்கு முன்பு ரூ.5 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் மகேஸ்வரிக்கும், பால்பாண்டிக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ரூ.1 லட்சத்தை மகேஸ்வரி, பால்பாண்டிக்கு கொடுத்துள்ளார். பாக்கி தொகை ரூ.4 லட்சத்தை விரைவில் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஷாஜகான், பால்பாண்டி, இவரது நண்பர்கள் போஸ், ஜெகநாதன்

ஆகியோர் மகேஸ்வரி கடைக்கு சென்று, மீதமுள்ள பணத்தை உடனே தருமாறு அவதூறாக பேசி கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மகேஸ்வரியை அவதூறாக பேசி அவமானம் செய்து, அருகேயுள்ள அவரின் வீட்டின் பீரோவை திறந்து 15 பவுன் தங்க நகை, வீட்டு பத்திரம் மற்றும் ரூ.50 ஆயிரத்தை எடுத்து சென்றனர். தேவதானப்பட்டி எஸ்.ஐ., தேவராஜ், ஷாஜகான், பால்பாண்டி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us