sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

/

மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 19, 2024 05:01 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி ஆண்டிபட்டி சீனிவாசன் நகரை சேர்ந்த குமராண்டிமகள் திவ்யா 30, என்பவருக்கும் மதுரை புதுப்பட்டியை சேர்ந்த அமிர்தராஜ் 35, என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது திவ்யாவிற்கு பெற்றோர் சார்பில் 57 பவுன் நகை மற்றும் வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள் கொடுத்துள்ளனர். அடுத்த ஆண்டில் வளைகாப்பு முடித்து திவ்யாவை பெற்றோர் வீட்டில் விட்டு சென்றவர்கள் மீண்டும் அவரை கணவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை. இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாமல் திவ்யாவை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும் திவ்யாவின் 20 பவுன் நகைகளை வைத்துக்கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றனர் என திவ்யா புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் கணவர் அமிர்தராஜ் மற்றும் உறவினர்கள் லதா, நல்லமுத்து, சுந்தரேசன், இலக்கியா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us