sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி தேனியில் இருவர் மீது வழக்கு

/

வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி தேனியில் இருவர் மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி தேனியில் இருவர் மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி தேனியில் இருவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 24, 2024 10:22 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தனியார் வங்கி ஊழியரிடம் வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்த கம்பம் அச்சக உரிமையாளர் காஞ்சனா 52, சென்னை சோழிங்கநல்லுார் சங்கரநாராயணன் 42, மீது தேனி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கூடலுார் கர்ணம் பழனிவேல்பிள்ளை தெரு முத்துப்பாண்டியன் 38. இவர் 2015 முதல் கம்பம் தனியார் வங்கியில் நகை கடன் பிரிவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்தார். அப்போது கம்பம் டி.எஸ்.கே., நகர் நந்தகோபாலன் காலனி அச்சக உரிமையாளர் காஞ்சனா , நகை அடகு வைக்க வங்கிக்குச் சென்றார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. காஞ்சனா தனக்கு, பல அரசு உயர் அதிகாரிகள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் தெரியும். அதனால் மத்திய அரசின் வருமான வரித்துறையில் வரி நடைமுறைகள் குறித்த புகார் அளிக்கும் அலுவலராக (Tax Complaint Authority Officer) வேலை வாங்கித் தருகிறேன். ரூ.20 லட்சம் கொடுத்தால், உடனே வேலை கிடைத்துவிடும் எனக்கூறினார்.

இதனை நம்பிய முத்துப்பாண்டியன், காஞ்சனா தெரிவித்த வங்கிக்கணக்கில் ரூ.3 லட்சமும், பின் காஞ்சனாவின் வீட்டில் வைத்து ரூ.13 லட்சத்தையும் நேரடியாக பல தவணைகளில் வழங்கியுள்ளார். அதன்பின் காஞ்சானா உறவினரான சென்னை சோழிங்நல்லுார் சங்கரநாராயணன் மூலம், முத்துப்பாண்டியன் மின்னஞ்சல் முகவரிக்கு பணி ஆணையை அனுப்பியுள்ளார். அதனை தெரிந்தவர்களிடம் காண்பித்த போது போலியானது என தெரியவந்தது. மொத்தம் ரூ.16 லட்சம் பெற்று வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி மோசடி செய்த காஞ்சனா , சங்கரநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் முத்துப்பாண்டியன் புகார் அளித்தார்.

மோசடியில் ஈடுபட்ட இருவர் மீதும் எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., லதா வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us