sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அனுமதியின்றி கல்குவாரி நடத்திய 8 பேர் மீது வழக்கு; 20 கிலோ வெடி மருந்துடன் 6 பேர் கைது

/

அனுமதியின்றி கல்குவாரி நடத்திய 8 பேர் மீது வழக்கு; 20 கிலோ வெடி மருந்துடன் 6 பேர் கைது

அனுமதியின்றி கல்குவாரி நடத்திய 8 பேர் மீது வழக்கு; 20 கிலோ வெடி மருந்துடன் 6 பேர் கைது

அனுமதியின்றி கல்குவாரி நடத்திய 8 பேர் மீது வழக்கு; 20 கிலோ வெடி மருந்துடன் 6 பேர் கைது


ADDED : மார் 04, 2025 03:14 AM

Google News

ADDED : மார் 04, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே அ.வாடிப்பட்டியிலிருந்து விராலிபட்டி செல்லும் ரோட்டில் அ.வாடிப்பட்டி தெற்குதெருவைச் சேர்ந்த தொப்பையன் மனைவி லதா 45. இவரது பட்டா நிலத்தில் அனுமதியின்றி கல்குவாரி செயல்பட்டு வருவதாக வருவாய்த்துறைக்கு புகார் சென்றது.

சப்-கலெக்டர் ரஜத்பீடன், தாசில்தார் மருதுபாண்டி, வி.ஏ.ஓ., ராஜ்குமார் சம்பவ இடத்தில் சோதனையிட்டனர். அங்கு அரசு அனுமதியில்லாமல் கற்களை வெடிவைத்து உடைத்து கனிமவள கொள்ளையில் ஈடுபடுவது தெரிந்தது. வி.ஏ.ஓ., ராஜ்குமார் புகாரில், ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் மற்றும் போலீசார் டெட்டனேட்டர் வெடிமருந்து குச்சிகள் மற்றும் 20 கிலோ வெடிமருந்து, பதிவெண் இல்லாத மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

வத்தலக்குண்டைச் சேர்ந்த பாலு 35. பெரியகுளம் கரட்டூர் வாழவந்தான் 49. கன்னியாகுமரியைச் சேர்ந்த வைகுண்ட விஜயன் 41. அதே ஊரைச் சேர்ந்த குமார் 46. தர்மபுரி மாவட்டம் பொன்னாகரத்தைச் சேர்ந்த சேகர் 45. அ.வாடிப்பட்டியைச் சேர்ந்த கூடலிங்கம் 49. அதே ஊரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 62. தொப்பையன் மனைவி லதா ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய பாலு, கோபாலகிருஷ்ணனை தவிர 6 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us