sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தடுப்பணை அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

தடுப்பணை அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தடுப்பணை அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தடுப்பணை அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஜூலை 16, 2024 04:55 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தேனி மாவட்டம் வாலையாறு குறுக்கே தடுப்பணை அமைக்க தமிழக அரசு சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

பூதிப்புரம் காந்தசொரூபன் தாக்கல் செய்த பொதுநல மனு:

பூதிப்புரம், வாழையாத்துபட்டி, ஆதிப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, கொப்புரங்கன்பட்டி, வலையபட்டி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. கிணற்று நீரை நம்பி மக்கள் விவசாயம் செய்கின்றனர். நிலத்தடி நீர் மட்டம் கீழே சென்றுவிட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியை வாலையாறு கடந்து செல்கிறது. இதன் குறுக்கே தடுப்பணை அமைத்தால் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நீர்வளத்துறை செயலர், பொதுப்பணித்துறை செயலருக்கு மனு அனுப்பினோம். கழுவத்தேவர்படுகை அருகே வாழையாறு குறுக்கே தடுப்பணை அமைக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பு: ரூ.25 லட்சத்தில் தடுப்பணை அமைக்கும் சாத்தியக்கூறு பற்றி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிந்துரைத்துள்ளார். தலைமை பொறியாளர் சில விபரங்கள் கோரியுள்ளார். இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள்: அரசு சட்டத்திற்குட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us