/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோவை, தேனி தம்பதி ரூ.39.40 லட்சம் மோசடி
/
கோவை, தேனி தம்பதி ரூ.39.40 லட்சம் மோசடி
ADDED : பிப் 23, 2025 02:00 AM
தேனி:தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே டி.மல்லையாபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், 33. இவரது மனைவி லதா அரசு வேலைக்கு முயற்சித்து வந்தார். இருவரும் தேனியில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர்.
அங்கு பணிபுரிந்த விஜயலட்சுமி அறிமுகமானார். 2023ல் ஆனந்தராஜ், லதா தம்பதி, கோடங்கிபட்டியில் உள்ள விஜயலட்சுமி வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அவர், தன் கணவர் பாஸ்கரன், கோவையைச் சேர்ந்த தன்யா, அவரது கணவர் கருணாநிதியை அறிமுகம் செய்தார்.
இவர்கள், 8 லட்சம் ரூபாய் வழங்கினால் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் உதவியாளர் பணி வாங்கி தருவதாகக் கூறினர். நம்பிய லதா, 6.30 லட்சம் ரூபாயை வழங்கினார். ஆனால், வேலை வாங்கி தராமல் ஏமாற்றினர்.
விசாரித்த போது, இவர்கள் வேலை வாங்கி தருவதாக தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரனிடம், 4.22 லட்சம், விக்னேஷிடம், 3.91 லட்சம், சங்கர்கணேஷிடம், 4.71 லட்சம் என, ஏழு பேரிடம், 39.40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரிந்தது.
அவர்கள் மீது நடவடிக்கை கோரி, தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆனந்தராஜ் மனு செய்தார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனு மாவட்ட குற்றப்பிரிவிற்கு அனுப்பப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, தன்யா, கருணாநிதி, விஜயலட்சுமி, பாஸ்கரன் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.