sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திராட்சைக்கு உரிய விலை கிடைக்க கலந்துரையாடல் கலெக்டர் தகவல்

/

திராட்சைக்கு உரிய விலை கிடைக்க கலந்துரையாடல் கலெக்டர் தகவல்

திராட்சைக்கு உரிய விலை கிடைக்க கலந்துரையாடல் கலெக்டர் தகவல்

திராட்சைக்கு உரிய விலை கிடைக்க கலந்துரையாடல் கலெக்டர் தகவல்


ADDED : பிப் 23, 2025 04:31 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : திராட்சைக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள், வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் கம்பம், சின்னமனுார், உத்தமபாளையத்தில் சுமார் 1710 எக்டேரில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டுகிறது.

இதில் மஸ்கட் எனும் பன்னீர் திராட்சை ரகம் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இவை வெளி மாவட்டங்கள் , கேரள வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. தட்பவெப்பநிலை காரணமாக டிசம்பர் முதல் பிப்., வரை இத்திராட்சை வரத்து குறைவாக இருக்கும். இச்சமயத்தில் மஹாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி திராட்சைகள் உள்ளூர் ரகத்தின் விலை அல்லது குறைவாக விற்பனையாகிறது.

இறக்குமதி செய்யப்படும் திராட்சை வரத்து மார்ச் முதல் வாரம் வரை இருக்கும்.

அதன்பின் உள்ளூர் திராட்சை கொள்முதல்,விலையேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். உள்ளூர் திராட்சை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள், வியாபாரிகள் இடையே கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us