sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரேஷன் கடையில் வினியோகம் செய்யாத பருப்பு, பாமாயில் ; சிரமத்தில் பெரியகுளம் தாலுகா பொது மக்கள்

/

ரேஷன் கடையில் வினியோகம் செய்யாத பருப்பு, பாமாயில் ; சிரமத்தில் பெரியகுளம் தாலுகா பொது மக்கள்

ரேஷன் கடையில் வினியோகம் செய்யாத பருப்பு, பாமாயில் ; சிரமத்தில் பெரியகுளம் தாலுகா பொது மக்கள்

ரேஷன் கடையில் வினியோகம் செய்யாத பருப்பு, பாமாயில் ; சிரமத்தில் பெரியகுளம் தாலுகா பொது மக்கள்


ADDED : மே 27, 2024 05:58 AM

Google News

ADDED : மே 27, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளத்தில் ரேஷன் கடையில் இம்மாதம் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெய் வழங்கப்படாததால் பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.

பெரியகுளம் தாலுகா பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் கீழ் 72 ரேஷன் கடைகளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான கார்டுதாரர்கள் உள்ளனர். மாதந்தோறும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் ரூ.30க்கு ஒரு கிலோ துவரம் பருப்பு, ரூ.25 க்கு ஒரு லிட்டர் பாமாயில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இம்மாதம் (மே) பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை.

இதனால் பொது மக்கள் வெளி மார்க்கெட்டில் ரூ.160க்கு ஒரு கிலோ துவரம் பருப்பும், ரூ. 110க்கு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வாங்குவதற்கு சிரமப்படுகின்றனர். பருப்பு, எண்ணெய் விரைவில் வழங்குவதற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியகுளம் வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக் கூறுகையில்: கடந்த மாதம் பருப்பு, எண்ணெய் இருப்பில் கார்டுதாரர்கள் பாதியளவிற்கு வழங்கப்பட்டது. ஓரிரு நாட்களில் பருப்பு, எண்ணெய் வந்து விடும். இம்மாதம் கடைசி வரை கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும்.' என, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us