ADDED : மார் 01, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடியில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தலைமை வகித்தார். போடி நகராட்சி தலைவர் ராஜ ராஜேஸ்வரி, போடி நகர தி.மு.க., செயலாளர் புருஷோத்தமன், போடி நகராட்சி கமிஷனர் பார்கவி, மாவட்ட திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மயிலம்மாள் முன்னிலை வகித்தனர். விழாவில் தேனி, போடி நகராட்சி, சங்கராபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 250 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். வளைகாப்புக்கு தேவையான பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டன.