sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மா சாகுபடியாளர்களுக்கு இழப்பீடு: விவசாயிகள் கோரிக்கை

/

மா சாகுபடியாளர்களுக்கு இழப்பீடு: விவசாயிகள் கோரிக்கை

மா சாகுபடியாளர்களுக்கு இழப்பீடு: விவசாயிகள் கோரிக்கை

மா சாகுபடியாளர்களுக்கு இழப்பீடு: விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஜூலை 28, 2024 03:58 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : மா சாகுபடி பாதித்துள்ளதால் விவசாயிகள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி நடைபெறுகிறது. பெரும்பாலும் மானாவாரி பயிராக மா சாகுபடி நடைபெறுகிறது. டிசம்பர், ஜனவரியில் பூ பூக்கும். ஏப்ரல் அறுவடை துவங்கி ஜூன் வரை நடைபெறும். ஆனால் இந்தாண்டு பூ பூக்கவே இல்லை. இதனால் மகசூல் 80 சதவீதம் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம் வட்டாரங்களில் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. வருவாய் இழப்பு மட்டுமல்லாது, ஒவ்வொரு விவசாயிக்கும் பூச்சி மருந்து தெளித்த வகையிலும் செலவுகள் ஆகி உள்ளது.

இது தொடர்பாக மா சாகுபடியாளர்கள் கூறுகையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் முழுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டது. மா விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர, அரசு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளில் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம், மா சாகுபடியாளர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்க வேண்டும் என்கின்றனர்.






      Dinamalar
      Follow us