/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் சாரல் மழை : காய்ச்சல் பரவ வாய்ப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
/
தொடர் சாரல் மழை : காய்ச்சல் பரவ வாய்ப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
தொடர் சாரல் மழை : காய்ச்சல் பரவ வாய்ப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
தொடர் சாரல் மழை : காய்ச்சல் பரவ வாய்ப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
ADDED : ஜூன் 27, 2024 04:15 AM
கம்பம் : கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சாரல் மழை இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தங்கள் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழையால் சில வாரங்களாக கம்பம் பள்ளத்தாக்கில் மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்த மழை நேற்று காலை முதல் விடாது பெய்து வருகிறது . மாவட்டம் முழுவதும் இதே நிலை உள்ளது. சாரல் மழை பெய்து வருவதால், வீதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவலாம். மேலும் சாதாரண வைரஸ் காய்ச்சலும் பரவலாக இருக்கும். எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
தண்ணீர் தேங்கும் இடங்களை , சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீடுகளில் நல்ல தண்ணீரை அதிக நாள் சேமித்து வைப்பதை தவிர்க்கவும், தண்ணீரை மூடி வைக்கவும், குடிநீரை நன்கு காய்ச்சி பருகவும் வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
துணை இயக்குநரின் உத்தரவை தொடர்ந்து சுகாதார துறையினர் கிராமங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக ஓடைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மணிகண்டன், சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளது. தொடர் சாரல் மழை காரணமாக டெங்கு பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.