sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விளைச்சல் குறைவால் விலை உயர்ந்த மல்லிகை

/

விளைச்சல் குறைவால் விலை உயர்ந்த மல்லிகை

விளைச்சல் குறைவால் விலை உயர்ந்த மல்லிகை

விளைச்சல் குறைவால் விலை உயர்ந்த மல்லிகை


ADDED : ஜூன் 16, 2024 01:55 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் மல்லிகை பூக்கள் விளைச்சல் குறைவால் கிலோ ரூ.1200 வரை விற்றது.

ஆண்டிபட்டி பகுதியில் திம்மரசநாயக்கனுார், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ஏத்தக்கோயில், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, சித்தார்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி உட்பட பல கிராமங்களில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது.

மழை, பனி, அதிகப்படியான காற்று மல்லிகை விளைச்சலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். வெயில் காலங்களில் விளைச்சல் அதிகம் கிடைக்கும்.

கடந்த சில மாதங்களில் வாட்டி வதைத்த வெயிலால் பூக்கள் விளைச்சல் அதிகம் இருந்தது. சமீபத்தில் பெய்த மழை அதனை தொடர்ந்து தற்போது வீசும் காற்றால் விளைச்சல் பாதித்துள்ளது. தேவைக்கேற்ற வரத்து இல்லாததால் ஆண்டிபட்டியில் நேற்று மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1200 வரை விற்றது.

பூக்கள் மொத்த வியாபாரி ஆண்டிபட்டி சாந்தி கூறியதாவது:

சீசன் காலத்தில் சில வாரங்களுக்கு முன் ஆண்டிப்பட்டியில் தினமும் 6 டன் வரை மல்லிகை பூக்கள் வரத்து இருந்தது.

தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தினமும் 100 கிலோ அளவு கூட வரத்து இல்லை.

வெளியூர்களுக்கும், சென்ட் தயாரிப்பு கூடங்களுக்கும் குறைந்த விலைக்கு அனுப்பப்பட்ட நிலை மாறி தற்போது உள்ளூர் தேவைக்கே பற்றாக்குறையாக உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us