sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மின்வாரிய குடியிருப்புகள் பயன்பாடு இன்றி சேதம்

/

மின்வாரிய குடியிருப்புகள் பயன்பாடு இன்றி சேதம்

மின்வாரிய குடியிருப்புகள் பயன்பாடு இன்றி சேதம்

மின்வாரிய குடியிருப்புகள் பயன்பாடு இன்றி சேதம்


ADDED : ஆக 03, 2024 05:26 AM

Google News

ADDED : ஆக 03, 2024 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே அணைக்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் பணியாளர் குடியிருப்புகள் கட்டி பல ஆண்டுகள் ஆகியும் பயன்படுத்தாததால் கட்டடங்கள் முட்புதர்களால் சூழ்ந்து சேதமடைந்து வருகிறது.

போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டியில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. துணை மின் நிலையம் துவங்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு பணிபுரியும் உதவி மின் பொறியாளர் மற்றும் பணியாளர்களுக்காக ரூ. பல லட்சம் செலவில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. பணியாளர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளில் சிலர் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். மற்ற குடியிருப்புகளை பயன்படுத்தாமல் உள்ளதால் கட்டடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு உள்ளன. இதனால் கால்நடைகளுக்கு புகழிடமாகவும், முட்புதர்களால் சூழ்ந்து, குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறி உள்ளன.

மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீராக தேங்குவதோடு, கட்டடம் சேதம் அடைகிறது.

சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் பாதுகாப்பு இன்றி உள்ளது. ரூ.பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மின் பணியாளர்களுக்கான குடியிருப்புகளை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us