sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளால் அபாயம்

/

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளால் அபாயம்

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளால் அபாயம்

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளால் அபாயம்


ADDED : ஜூன் 27, 2024 05:07 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி, : போடி அருகே விசுவாசபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகே தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளால் விபத்து அபாயம் நிலை உள்ளது.

போடி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விசுவாசபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அருகே தென்னை, மக்காச்சோளம், சம்பங்கி, கால்நடை தீவனத்திற்கான சீமைப்புல் உள்ளிட்ட பயிர்கள் 10 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ளனர். விளை பொருட்களை வரதராஜ பெருமாள் கோயில் பாதை வழியாக விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். தினமும் பெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயில் அருகே கையில் தொடும் வகையில் தாழ்வாக உயரழுத்து மின் கம்பிகள் தொங்கிக் கொண்டுள்ளன.

தென்னை கீற்றுகள் மின் கம்பிகள் மீது உரசி விழும் நிலையில் உள்ளது. இதனால் இப்பாதையை கடந்து செல்ல விவசாயிகள், பக்தர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் தாழ்வான நிலையில் தொங்கி கொண்டிருக்கும் உயரழுத்த மின் கம்பிகளை சரி செய்யும் வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us