/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொலை மிரட்டல் : இருவர் மீது வழக்கு
/
கொலை மிரட்டல் : இருவர் மீது வழக்கு
ADDED : ஆக 18, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, :' போடி அருகே துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் குருசாமி 79. இவரிடம் இதே பகுதியை சேர்ந்த முருகன் இவரது மனைவி பவளராணி இருவரும் சேர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.90 லடசம் கடன் வாங்கி உள்ளனர். வாங்கிய பணத்தை பலமுறை கேட்டும் தராமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேரில் சென்று குருசாமி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் குருசாமியை தகாத வார்த்தையில் பேசியதோடு, பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
போடி தாலுகா போலீசார் முருகன், பவள ராணி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.