/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலவரக்காரர்கள் பட்டியலை துணை ராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு ; தேர்தல் முடியும் வரை போலீஸ் கண்காணிப்பிற்குள் வருகின்றனர்
/
கலவரக்காரர்கள் பட்டியலை துணை ராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு ; தேர்தல் முடியும் வரை போலீஸ் கண்காணிப்பிற்குள் வருகின்றனர்
கலவரக்காரர்கள் பட்டியலை துணை ராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு ; தேர்தல் முடியும் வரை போலீஸ் கண்காணிப்பிற்குள் வருகின்றனர்
கலவரக்காரர்கள் பட்டியலை துணை ராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு ; தேர்தல் முடியும் வரை போலீஸ் கண்காணிப்பிற்குள் வருகின்றனர்
ADDED : ஏப் 08, 2024 04:59 AM
லோக்சபா தேர்தலை சட்டம் ஒழுங்கு பிரச்னை இன்றி அமைதியாக நடத்த போலீசார் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேலையில் எந்த பகுதியிலும் சிறு பிரச்னைகள் எதுவும் ஏற்படக்கூடாது என்பதில் போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதற்காக பல்வேறு வகையில் சிந்தித்து நடவடிக்கைகள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதில் கடந்த 15 ஆண்டுகளில் கலவரம் நடந்த பகுதிகள் குறித்த விபரங்கள், அதற்கான காரணங்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்களின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள், அவர்களது தற்போதைய நிலை போன்ற முழு விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
மேலும் அரசியல், ஜாதி ரீதியாக ஏற்பட்ட கூடிய பிரச்னைகள் குறித்து மாவட்ட போலீஸ் நிர்வாகம் மூலம் சேகரிக்கப்பட்டு, டி.ஐ.ஜி., அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
கலவரங்களில் ஈடுபட்டவர்களில் சிலர் வேலைக்காக வெளியூர் சென்றிருந்தாலும், அங்குள்ள போலீசருக்கு தகவல் அளித்து அவர்களை போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இது போல குற்ற வழக்குகளில் ஈடுபட்டு விசாரணைக்கு ஆஜராகாமல், பிடிபடாமல் தலை மறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். இவர்களது பட்டியலை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வரும் துணை ராணுவத்தினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

