sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குச்சனுார் வரதராஜ பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை - பொது மக்கள் வாக்குவாதம் கும்பாபிஷேகம் நடக்க இருந்த நிலையில் போலீசார் குவிப்பு

/

குச்சனுார் வரதராஜ பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை - பொது மக்கள் வாக்குவாதம் கும்பாபிஷேகம் நடக்க இருந்த நிலையில் போலீசார் குவிப்பு

குச்சனுார் வரதராஜ பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை - பொது மக்கள் வாக்குவாதம் கும்பாபிஷேகம் நடக்க இருந்த நிலையில் போலீசார் குவிப்பு

குச்சனுார் வரதராஜ பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை - பொது மக்கள் வாக்குவாதம் கும்பாபிஷேகம் நடக்க இருந்த நிலையில் போலீசார் குவிப்பு


ADDED : ஜூலை 08, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனுார்: குச்சனுார் வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று கோயில் யாருக்கு சொந்தம் என்பதில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கும், பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கோயில் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இக்கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடக்க இருக்கிறது. கடந்த ஒரு மாதமாகவே கோயில் உரிமை தொடர்பாக குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் உட்பட இரு பிரிவுகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கலசங்களை காணவில்லை என ஒரு பிரிவினர் சின்னமனுார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை செய்து, இரு தரப்பினர் தகராறு என்பதால் உத்தமபாளையம் ஆர்.டி.ஒ., விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் இருதரப்பினரையும் அழைத்து உத்தமபாளையம் ஆர். டி.ஏ. தாட்சாயிணி சமாதானம் செய்தார். இரு தரப்பினரும் இணைந்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டார். அதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் இன்று நடக்க இருந்த கும்பாபிஷேகத்திற்கான யாக கால பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.அப்போது அங்கு வந்த ஹிந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் அன்னக்கொடி, கோயில் முன் அறிவிப்பு பலகை ஒன்றை நிறுவ முற்பட்டார். அதற்கு கும்பாபிஷேகம் நடத்துபவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போடி டி.எஸ்.பி. பெரியசாமி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பக்தர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஹிந்து சமய அறநிலைய துறையினர் அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து கும்பாபிஷேகத்தை நடத்துபவர்களில் ஒருவரான சுதாகர் கூறுகையில், 'கோயில் எங்களுக்கு சொந்தமானது. அறநிலைய துறையினர் திடீரென இப்போது வந்து கோயில் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.' என்கின்றனர். அதற்கான ஆவணங்களை கொடுங்கள் என்றால் தர மறுக்கின்றனர்.', என்றார்.

துணை ஆணையர் அன்னக்கொடி கூறுகையில், 'கோயில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டது. எங்களின் அனுமதி பெறாமல் கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். செயல் அலுவலர் நாகராஜ், தக்காராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.', என்றார்.






      Dinamalar
      Follow us