/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூங்கிலணை காமாட்சியம்மன் திருவிழாவில் திரண்ட பக்தர்கள்
/
மூங்கிலணை காமாட்சியம்மன் திருவிழாவில் திரண்ட பக்தர்கள்
மூங்கிலணை காமாட்சியம்மன் திருவிழாவில் திரண்ட பக்தர்கள்
மூங்கிலணை காமாட்சியம்மன் திருவிழாவில் திரண்ட பக்தர்கள்
ADDED : மார் 02, 2025 05:25 AM

தேவதானப்பட்டி: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவில் பக்தர்கள் திரண்டனர்.
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மஹா சிவராத்திரி பிப்.26 முதல் மார்ச் 5 வரை 8 நாட்கள் திருவிழா நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 4 ம் நாள் திருவிழா பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மஞ்சளாறு அணையில் இருந்து வினாடிக்கு 45 கனஅடிநீர் வெளியேறுவதால் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. பக்தர்கள் குளித்து முடிகாணிக்கை, அக்னி சட்டி எடுத்தல், கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை அதில் படுக்க வைத்து பெண்கள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழாவில் 24 மணி நேரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் போலீசார் பற்றாக்குறை உள்ளது. இன்று (மார்ச் 2) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.