/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதிமீறலில் பறிமுதலான வாகனங்களால் இடையூறு: ஏலம் விட வலியுறுத்தல்
/
விதிமீறலில் பறிமுதலான வாகனங்களால் இடையூறு: ஏலம் விட வலியுறுத்தல்
விதிமீறலில் பறிமுதலான வாகனங்களால் இடையூறு: ஏலம் விட வலியுறுத்தல்
விதிமீறலில் பறிமுதலான வாகனங்களால் இடையூறு: ஏலம் விட வலியுறுத்தல்
ADDED : ஆக 12, 2024 03:46 AM

போடி : போடி சப்- டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் விதிமீறலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடாமல் 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், புதிதாக பறிமுதல் செய்யும் வாகனங்களை நிறுத்த இடம் இன்றி போலீசார் சிரமப்படுவதுடன், ஏலம் விட கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடி சப்டிவிஷனில் பிளாஸ்டிக் பைகளில் மணல் அள்ளி டூவீலர், நம்பர் இல்லாத போலி டூவீலர் மூலம் கடத்தி வந்தனர்.
ஆற்று மணல், ஓடை மண் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்த 500 க்கும் மேற்பட்ட டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது போல கஞ்சா, மது, திருட்டு, விபத்து, போதையில் ஓட்டி வந்த வழக்கில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள், கார்களை அந்தந்த ஸ்டேஷன் வளாக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பல ஆண்டுகளுக்கு மேலாகியும் உரியவர்களிடம் ஒப்படைக்காமலும், ஏலம் விடாததாலும் பயன்பாடு இன்றி காட்சிப் பொருட்களாக உள்ளன.
இதனால் குப்பை, தென்னை மட்டை, மரபட்டைகள் சூழ்ந்தும், மழை, வெயிலால் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. பறிமுதல் செய்த சில வாகனங்களில் பெட்ரோல் இருக்கும் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
போலீஸ் விசாரணைக்கு வருபவர்கள் சிலர் புகைப்பதற்கு மறைவாக உள்ள பறிமுதல் செய்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று சிகரெட், பீடிகளை அணைக்காமல் அப்படியே வீசிச் செல்கின்றனர்.
இதனால் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன், ஸ்டேஷனிலும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அரசுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடவும், வளாக பகுதியை பயன் பாட்டிற்கு கொண்டு வர எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

