sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போதையில் தகராறு: உறவினர் கட்டையால் தாக்கி கொலை; தந்தை, மகன் கைது

/

போதையில் தகராறு: உறவினர் கட்டையால் தாக்கி கொலை; தந்தை, மகன் கைது

போதையில் தகராறு: உறவினர் கட்டையால் தாக்கி கொலை; தந்தை, மகன் கைது

போதையில் தகராறு: உறவினர் கட்டையால் தாக்கி கொலை; தந்தை, மகன் கைது


ADDED : மே 06, 2024 12:45 AM

Google News

ADDED : மே 06, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனுார் : தேனி மாவட்டத்தில் உறவினரை கட்டையால் தாக்கி கொலை செய்து உடலை முல்லைப்பெரியாற்றில் விட்டு சென்ற சீலையம்பட்டியை சேர்ந்த தந்தை மலைராமு 59, மகன் பவுன்ராஜ் 36, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சின்னமனுார் சீலையம்பட்டி மலைராமு 56. இவரது உறவினர் முனியப்பன் 40.

இவரை மலைராமு சிறுவயதில் இருந்தே தன் வீட்டில் வளர்த்து வருகிறார். முனியப்பன் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

மனதளவில் பாதிக்கப்பட்ட மலைராமு இவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.

இந்நிலையில் சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றில் முனியப்பன் உடம்பில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக சின்னமனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

எஸ்.ஐ., சுல்தான் பாட்சா மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை துவக்கினர்.

அதில் ரீப்பர் கட்டையால் தாக்கி முனியப்பன் கொலை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து, வி.ஏ.ஒ. மகேஸ்வரி புகாரில், கொலை வழக்கு பதிவு செய்தனர். பின் மலைராமு, அவரது மகன் பவுன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us