sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஜாதி, மத உணர்வுகள் புண்படுத்தும் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது டி.எஸ்.பி., பார்த்திபன் வலியுறுத்தல்

/

ஜாதி, மத உணர்வுகள் புண்படுத்தும் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது டி.எஸ்.பி., பார்த்திபன் வலியுறுத்தல்

ஜாதி, மத உணர்வுகள் புண்படுத்தும் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது டி.எஸ்.பி., பார்த்திபன் வலியுறுத்தல்

ஜாதி, மத உணர்வுகள் புண்படுத்தும் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது டி.எஸ்.பி., பார்த்திபன் வலியுறுத்தல்


ADDED : ஆக 31, 2024 06:38 AM

Google News

ADDED : ஆக 31, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : 'விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஜாதி, மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான நடவடிக்கைகள் இருக்கக் கூடாது.' என, ஆலோசனைக் கூட்டத்தில் டி.எஸ்.பி., பார்த்திபன் வலியுறுத்தினார்.

தேனியில் விநாயாகர் சதுர்த்தி விழா, ஊர்வலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்து. தேனி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், இளவரசன், சஜூகுமார் முன்னிலை வகித்தனர்.

ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி, பிற ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். டி.எஸ்.பி., பேசுகையில், 'விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களில் கூரை இரும்பு சீட் கொண்டு அமைக்க வேண்டும். அவ்விடத்திற்கு மின்வாரிய அனுமதி பெற வேண்டும். ஊர்வலத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.

அதே போல் ஜாதி, மத உணர்வுகள் புண்படும் வகையில் பாடல்கள், கொடிகள் பயன்படுத்த கூடாது.', என்றார். ஹிந்து அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us