/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கி மாவட்டத்திற்கு இ சேவா கேந்திரா வாகனம் கேரள ஐகோர்ட் அனுமதி
/
இடுக்கி மாவட்டத்திற்கு இ சேவா கேந்திரா வாகனம் கேரள ஐகோர்ட் அனுமதி
இடுக்கி மாவட்டத்திற்கு இ சேவா கேந்திரா வாகனம் கேரள ஐகோர்ட் அனுமதி
இடுக்கி மாவட்டத்திற்கு இ சேவா கேந்திரா வாகனம் கேரள ஐகோர்ட் அனுமதி
ADDED : மே 28, 2024 03:29 AM
கம்பம் : இடுக்கி மாவட்டத்திற்கு மொபைல் இ சேவா கேந்திரா வாகனத்தை கேரள ஐகோர்ட் அறிமுகம் செய்துள்ளது.
நீதிமன்ற வழக்குகளை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வது, வழக்கு விபரங்களை எளிதாக தெரிந்து கொள்வது, வாய்தா விபரங்களை தெரிந்து கொள்வது, தீர்ப்பு நகல்களை பெறுவது, கோர்ட் விடுமுறையை தெரிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக நீதிமன்றங்களுக்கு செல்லாமல், இ சேவா கேந்திரங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அனைத்து மாநில ஐகோர்ட்டுகள், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாவட்ட கோர்ட்டில் சோதனை ஒட்ட முறையில் இ சேவா கேந்திரங்களை துவக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் சொகுசு பஸ்சில் மொபைல் இ சேவா கேந்திராவை அம்மாநில ஐகோர்ட் துவக்கி உள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் இரண்டாவது இடமாக இடுக்கி மாவட்டம் உள்ளது. எனவே தொடுபுழா மாவட்ட கோர்ட்டின் கட்டுப்பாட்டில் இ சேவா கேந்திரா வாகனம் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் மலைப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களின் கோர்ட் தொடர்பான விஷயங்களை இனி எளிதில் பெற முடியும்.
மாவட்டம் முழுவதும் இந்த மொபைல் இ சேவா கேந்திரா சுற்றி வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது-