ADDED : ஆக 31, 2024 06:33 AM

ஆண்டிபட்டி : உள்ளூர், வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதற்கான முகாம் ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
முகாமில் தேனி கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அமைச்சர் பேசியதாவது:
மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவருக்கும் கல்விக் கடன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மாவட்டம் தோறும் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தேனி மாவட்டத்தில் நடந்த கல்வி கடன் முகாமில் கனரா வங்கி மூலம் 18 நபர்களுக்கு ரூ.91 லட்சம், எஸ்.பி.ஐ., வங்கி மூலம் 7 நபர்களுக்கு ரூ.90 லட்சம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் ஒரு நபருக்கு ரூ.24 லட்சம், பேங்க் ஆப் இந்தியா மூலம் ஒரு நபருக்கு ரூ.20 லட்சம், இந்தியன் வங்கி மூலம் 7 நபர்களுக்கு ரூ.23 லட்சம், ஐ.டி.பி.ஐ., வங்கி மூலம் ரூ.20 லட்சம் என 34 நபர்களுக்கு ரூ.2.68 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 127 மாணவர்களுக்கு ரூ.7.97 கோடி மதிப்பில் கல்வி கடன் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது., என்றார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட சிறப்பு அலுவலர் முரளி, முன்னோடி வங்கி மேலாளர் விஜயசேகர், பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி நிர்வாகத் தலைவர் மோகன், முதல்வர் அருள்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.