sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பையால் மாசுபடும் சுற்றுச்சூழல்; கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள்

/

ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பையால் மாசுபடும் சுற்றுச்சூழல்; கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள்

ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பையால் மாசுபடும் சுற்றுச்சூழல்; கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள்

ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பையால் மாசுபடும் சுற்றுச்சூழல்; கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள்


ADDED : ஜூலை 01, 2024 06:49 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை தொடர்ந்து எரிக்கப்படுவதால் அதிலிருந்து எழும் புகை மண்டலத்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

திண்டுக்கலில் இருந்து குமுளிக்கு தேனி வழியாக நெடுஞ்சாலை அமைப்பட்டுள்ளது. இந்த ரோடு தேனி நகர் பகுதிக்குள் வராமல் மதுராபுரி விலக்கு, போடி விலக்கு வழியாக செல்கிறது. இந்த ரோட்டில் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் செல்லும் ரோட்டிற்கு அருகே சிலர் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைக்கு சிலர் தீ வைக்கும் சம்பவமும் தொடர்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் டூவீலர்கள், வாகனங்களில் செல்லும் முதியோர், குழந்தைகள் சுவாச நோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது. சில நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை சூழ்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நச்சுப்புகையால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவோர் மீதும், அதற்கு தீ வைப்பவர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் இதுகுறித்து கண்டு கொள்ளாமல் இருப்பதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us