sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மஞ்சளாறு அணை நிரம்பியதால் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம்

/

மஞ்சளாறு அணை நிரம்பியதால் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம்

மஞ்சளாறு அணை நிரம்பியதால் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம்

மஞ்சளாறு அணை நிரம்பியதால் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம்


ADDED : ஆக 15, 2024 04:02 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : மஞ்சளாறு அணையில் நிரம்பியதால் இரு கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. முருகமலை, வரட்டாறு, இருட்டாறு, தலையாறு, பெருமாள் மலை பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர்வரத்துள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. அணை பாதுகாப்பு கருதி 55 அடி மட்டுமே நீர்த்தேக்க முடியும்.

சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 276 கன அடி நீர்வரத்துள்ளது. இந்த உபரி நீர் இருகண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த நீரினால் தேனி மாவட்டம், மஞ்சளாறு, தேவதானப்பட்டி, ஜி கல்லுப்பட்டி.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, தும்மலப்பட்டி, குன்னுவாரன்கோட்டை பகுதி விவசாயத்திற்கும், நூற்றுக்கணக்கான கிணறுகளுக்கு ஊற்று கிடைக்கும்.

மஞ்சளாறு அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் செல்வதால் கரையோரம் பகுதி மக்களுக்களுக்கு பொதுப்பணிதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.-






      Dinamalar
      Follow us