/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டுப்பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம் பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
/
காட்டுப்பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம் பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
காட்டுப்பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம் பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
காட்டுப்பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம் பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
ADDED : ஏப் 27, 2024 05:03 AM
போடி: போடி மலை கிராமங்களில் மிளகு கொடிகளை காட்டு பன்றிகள் வேரோடு அழித்து சேதம் ஏற்படுத்தி வருவதால் விளைந்த மிளகை பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, பிச்சாங்கரை, வடக்குமலை, அகமலை உள்ளிட்ட பகுதியில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காபி பயிரிட்டுள்ளனர். இடையில் ஊடு பயிராக வளர்ந்து ஓங்கிய மரங்களில் மிளகு கொடிகளை வளர்த்து வருகின்றனர். கொடியில் நன்கு வளர்ந்துள்ள நிலையில் காட்டு பன்றிகள் மிளகு கொடிகளை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் விளைந்த மிளகை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளன. பன்றிகள் தொந்தரவால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
50 கி.மீ., தூரத்திற்கு வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் வகையில் குழிகள் அமைக்கவும் 25 கி.மீ., தூரத்திற்கு சோலார் மின்வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் முதன்மை வன பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்து பல ஆண்டுகள் ஆகியும் திட்டம் செயல் படுத்தாமல் கிடப்பில் உள்ளன.
வன விலங்குகளை காப்பாற்றுவதோடு, பயிர்கள் சேதம் ஏற்படுவதை தடுக்க வனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க வனத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

