ADDED : செப் 11, 2024 12:42 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுக விழா, நன்னெறி படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி நிர்வாக தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதாமீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அருள்குமார் வரவேற்றார். முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் பெற்றோர்களாகிய விவசாயிகள், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் பெற்றோர்களை குத்துவிளக்கேற்றச் செய்து, கவுரவித்தனர். சிறப்பு விருந்தினராக சர்வதேச பேச்சாளர் டாக்டர் ஜெகன் பங்கேற்று மாணவர்களுக்கு நன்னெறி, அறம் சார்ந்த வாழ்வு, புதிய தொழில்நுட்பத்தின் தேவைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறைத் தலைவர்கள் பிரமிளா, ருஜ்வானா, பேராசிரியர்கள் செய்திருந்தனர்.