sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போடிமெட்டு மலைப்பாதையில் சாரல் மழையுடன் பனிமூட்டம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

/

போடிமெட்டு மலைப்பாதையில் சாரல் மழையுடன் பனிமூட்டம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

போடிமெட்டு மலைப்பாதையில் சாரல் மழையுடன் பனிமூட்டம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

போடிமெட்டு மலைப்பாதையில் சாரல் மழையுடன் பனிமூட்டம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


ADDED : மார் 12, 2025 06:55 AM

Google News

ADDED : மார் 12, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி; கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் போடி - மூணாறு செல்லும் போடிமெட்டு மலைப் பாதையில் சாரல் மழையுடன் பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனியில் - மூணாறு செல்லும் ரோட்டில் தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் அமைந்து உள்ளது போடிமெட்டு. தேனியில் இருந்து 22 கி.மீ., சமவெளியில் சென்றால் போடி முந்தல் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப் பாதையை 22 கி.மீ., கடந்து சென்றால் தமிழகத்தின் எல்லை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4644 அடி உயரத்தில் போடிமெட்டு மலைப்பகுதி அமைந்து உள்ளது.

போடி, கேரளா பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் வானிலை சட்டென மாறியதால் போடி பகுதி, போடிமெட்டு பகுதியில் சாரல் மழை பெய்தது.

போடிமெட்டு, பூப்பாறை செல்லும் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலையில் பனிமூட்டம் நிலவியது. பலர் முகப்பு லைட் போடாமல் ஓட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சாரல் மழையுடன் பனி மூட்டம் நிலவியதால் தோட்ட பணிகள் மேற்கொள்ள தொழிலாளர்கள் சிரமம் அடைந்தனர். சாரல் மழை, பனிமூட்டத்தால் வளைவான மலைப் பாதையில் வாகன விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க சோலார் மூலம் 'முகப்பு லைட்' வசதி அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்






      Dinamalar
      Follow us