/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்: பக்தர்கள் திரண்டு தரிசனம்
/
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்: பக்தர்கள் திரண்டு தரிசனம்
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்: பக்தர்கள் திரண்டு தரிசனம்
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்: பக்தர்கள் திரண்டு தரிசனம்
ADDED : மே 01, 2024 08:09 AM

கம்பம் : கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பத்தர்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர்.
கம்பம் கவுமாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.இக் கோயில் புராதான, சிறப்பு கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் ஏப். 17, ல் துவங்கியது. தொடர்ந்து கம்ப ராயப்பெருமாள் கோயிலில் இருந்த உற்சவர், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோயிலில் கணபதி ஹோமம் நடத்தினர்.
பின்னர் முக்கொம்பு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயில் கம்பத்தில் இணைத்து கட்டப்பட்டது. புது வஸ்திரம் உடுத்தி மஞ்சள் நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஒரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தி வருகின்றனர். தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்துடன் வீதி உலா வருகிறார்.
21 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று (மே 1 ல்) கம்பம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடனை செலுத்துவார்கள். பொங்கல் வைத்தல், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். அன்று இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டியும், ஹிந்து சமய அறநிலைய துறையும் செய்து வருகிறது.