ADDED : மே 24, 2024 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கேரளாவில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூடலுார், கருநாக்கமுத்தன்பட்டி வழியாக அதிகம் செல்கின்றனர்.
மேலும் தமிழகப் பகுதியில் இருந்து சுருளி அருவிக்கு சென்றபின் கேரளா செல்லும் சுற்றுலாப் பயணிகள் கூடலுார் வழியாக வருகின்றனர். இவ்வாறு வரும்போது ஊரின் துவக்கப் பகுதியில் ரோட்டோரத்தில் குவிந்திருக்கும் குப்பையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் முகம் சுளித்து செல்கின்றனர். வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோட்டில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.