நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே அழகாபுரியை சேர்ந்தவர் மாணிக்கம் 55, அப்பகுதியில் ஆடுகள் வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.
ஆடுகளை இரவில் வீட்டின் அருகே உள்ள கொட்டத்தில் அடைத்து வைத்திருந்தார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இரு ஆடுகளை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் அருகில் உள்ளவரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணிக்கம் புகாரில் ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.