sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சோத்துப்பாறை கூட்டு குடிநீர் தொட்டியில் மீன் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு

/

சோத்துப்பாறை கூட்டு குடிநீர் தொட்டியில் மீன் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு

சோத்துப்பாறை கூட்டு குடிநீர் தொட்டியில் மீன் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு

சோத்துப்பாறை கூட்டு குடிநீர் தொட்டியில் மீன் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு


ADDED : பிப் 10, 2025 05:14 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் தண்டுப்பாளையம் ரோட்டில் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட தொட்டி மூடி இல்லாததால், மீன் கழிவு நீர் தண்ணீரில் கலந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் சோத்துப்பாறை ரோட்டில் நெடுஞ்சாலை துறையினர் தண்டுப்பாளையம் பகுதியில் ரோட்டினை கடந்த மாதம் அகலப்படுத்தினர்.

அப்போது மண் அள்ளும் இயந்திரம் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி செல்லும் குடிநீர் தரைமட்ட தொட்டி மூடியினை உடைத்தது.

இதனால் திறந்தவெளியாக தண்ணீர் தொட்டி உள்ளது. இப்பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு மீன் கடைக்காரர்கள் இந்த தொட்டியில் தண்ணீர் எடுத்து மீனை சுத்தம் செய்கின்றனர். மீன் கழுவப்பட்ட அசுத்த நீர் இந்த தொட்டிக்குள் செல்கிறது.

இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. மேலும் பள்ளி அருகே உள்ளதால் சிறுவர்கள் தொட்டிக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து உடனடியாக தொட்டிக்கு மூடி அமைத்து பாதுகாக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us