ADDED : ஏப் 15, 2024 01:11 AM
அ நிறம் | அளவு
போடி- போடி அருகே ரங்கநாதபுரம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் 36., இவரது மனைவி ஈஸ்வரி 33.
ஈஸ்வரன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். ஈஸ்வரன் குடிபோதையில் மனைவி ஈஸ்வரியை அடித்துள்ளார். ஈஸ்வரி கோபித்துக் கொண்டு வெளியே சென்றவர் திரும்ப வந்துள்ளார். ஈஸ்வரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
