ADDED : செப் 05, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அரசு பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான 2 வார கால துாண்டல் திட்ட துவக்க விழா முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது. பேராசிரியர் உமா மகேஸ்வரி, இணை பேராசிரியர்கள் மெய்யராஜ், பொன்மணி, உதவி பேராசிரியர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாணவர்கள் படிப்பதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், விடுதியில் பின்பற்ற வேண்டிய விதி முறைகள், மாணவர்கள், பெற்றோர்களின் பங்களிப்பு குறித்து பேராசிரியர்கள் எடுத்து கூறினர். விழாவில் பேராசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.