/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெற்றிலை விலை உயர்வு சாகுபடியாளர்கள் மகிழ்ச்சி
/
வெற்றிலை விலை உயர்வு சாகுபடியாளர்கள் மகிழ்ச்சி
ADDED : செப் 07, 2024 06:43 AM
கம்பம்: முகூர்த்த நாட்களால் வெள்ளை மற்றும் கறுப்பு வெற்றிலை விலை உயரத் துவங்கியுள்ளது.
வெற்றிலை மங்களகரமான மருத்துவகுணம் கொண்டது. அனைத்து விசேசங்களிலும் முன்னிலை வகிக்கிறது தேனி மாவட்டத்தில் , கம்பம், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பல ஊர்களில் வெற்றிலை சாகுபடியாகிறது. சின்னமனூர், பெரியகுளம் வட்டாங்களில் வெள்ளை மற்றும் கருப்பு வெற்றிலை பிரதானமாக சாகுபடியாகிறது.
தற்போது கறுப்பு வெற்றிலை விலை கிலோ ரூ. 180 ஆக இருந்தது ரூ. 200 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளை வெற்றிலை ரூ. 280 ஆக இருந்தது ரூ.320 வரை உயர்ந்தது. வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் திடம் சக்கை, திடம் மாரு ரகங்கள் வரத்து குறைந்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் சைடு பிரி ( கறுப்பு ) மற்றும் திடம் சக்கை, திடம் மாரு தட்டுப்பாடாக உள்ளது.
சின்னமனூர் முன்னோடி வெற்றிலை சாகுபடியாளர் ரவி கூறுகையில், கோயில் திருவிழாக்கள், முகூர்த்த காலமாக இருப்பதால் விலை உயர்ந்து வருகிறது. வெளி மாநிலங்களான டில்லி, மகாராஷ்டிரா, ஆக்ரா போன்ற ஊர்களுக்கு அனுப்ப முடியவில்லை. அந்த வெற்றிலை வரத்தும் இல்லை என்றார்.