/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கிக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு 4.80 லட்சம் சுற்றுலா பயணிகள் ரசிப்பு
/
இடுக்கிக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு 4.80 லட்சம் சுற்றுலா பயணிகள் ரசிப்பு
இடுக்கிக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு 4.80 லட்சம் சுற்றுலா பயணிகள் ரசிப்பு
இடுக்கிக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு 4.80 லட்சம் சுற்றுலா பயணிகள் ரசிப்பு
ADDED : ஜூன் 02, 2024 04:11 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட சுற்றுலா துறைக்குச் சொந்தமான சுற்றுலா பகுதிகளை மே மாதத்தில் மட்டும் 4.80 லட்சம் பயணிகள் ரசித்தனர்.
இடுக்கி மாவட்டத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு இந்தாண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
குறிப்பாக கோடை சுற்றுலா சீசனில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் அதிகமாக வருகை தந்தனர்.
மாவட்டத்தில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்குச் சொந்தமான சுற்றுலா பகுதிகளுக்கு மே ஒன்று முதல் 31 வரை 4,80,751 பயணிகள் வந்தனர். மிகவும் கூடுதலாக வாகமண் அட்வஞ்சர் பூங்காவை 1,44,343 பயணிகள் ரசித்தனர்.
மாவட்ட மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான சுற்றுலா பகுதிகளை மே மாதம் ரசித்த பயணிகளின் எண்ணிக்கை:
மாட்டுபட்டி 14,290, ராமக்கல்மேடு 27,276, அருவிகுழி 2675, ஸ்ரீ நாராயணபுரம் 24,082, வாகமண் மலை குன்று 1,22,452, வாகமண் அட்வஞ்சர் பூங்கா 1,44,343, இடுக்கி ஹில் பார்க் 16,741, பாஞ்சாலிமேடு 17,213, மூணாறு அரசு தாவரவியல் பூங்கா 1,11,679 பயணிகள் ரசித்தனர்.
இது தவிர வனம், மின்வாரியம் ஆகிய துறைகளைச் சார்ந்த சுற்றுலா பகுதிகளுக்கும் அதிகமாக பயணிகள் சென்றனர்.
சாதனை: மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு மே மாதம் சென்ற பயணிகளின் எண்ணிக்கை பெரும் சாதனையை ஏற்படுத்தியது. பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு வரையாடுகளை காண சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். அங்கு மே ஒன்று முதல் 31 வரை 1,05,000 பயணிகள் சென்றனர். ராஜமலையில் கடந்த 2006ல் நீலக்குறிஞ்சி பூத்தபோது அதனை 83 ஆயிரம் பயணிகள் ரசித்தனர்.
அதனை சாதனையாக கருதப்பட்டது. அதனை முறியடித்து மே மாதம் மட்டும் 1,05,000 பயணிகள் சென்று புதிய சாதனையை ஏற்படுத்தியது. அதேபோல் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள லக்கம் நீர்வீழ்ச்சியை மே மாதத்தில் 49 ஆயிரம் பயணிகள் ரசித்தனர்.