sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

/

பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்


ADDED : ஆக 25, 2024 02:27 AM

Google News

ADDED : ஆக 25, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீர் வினாடிக்கு 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த வினாடிக்கு 300 கன அடி நீர், ஆக.20ல் வினாடிக்கு 105 கன அடியாக குறைக்கப்பட்டது.

தற்போது தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடி நடப்பதால் நீரின் அளவை அதிகரிக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

நேற்று காலை 6:00 மணிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்மட்டம் 129.70 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 623 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 4632 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பில் கடும் வெப்பம் நிலவியது.

லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்ய குறைந்தது 300 கன அடி நீர் தேவைப்படும் . நீர் திறப்பு 105 கனஅடியாக குறைந்ததால் ஆக.20 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நேற்று மீண்டும் நீர் திறப்பு அதிகரித்ததால் ஒரு ஜெனரேட்டரில் 36 மெகா வாட்மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது.






      Dinamalar
      Follow us