sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லார் எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: தொழிலாளர்கள் அச்சம்

/

கல்லார் எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: தொழிலாளர்கள் அச்சம்

கல்லார் எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: தொழிலாளர்கள் அச்சம்

கல்லார் எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: தொழிலாளர்கள் அச்சம்


ADDED : ஆக 26, 2024 06:49 AM

Google News

ADDED : ஆக 26, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:

மூணாறு அருகே கல்லார் எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்ததால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர்.

அப்பகுதியில் காட்டு மாடுகள் நூற்றுக்கணக்கில் உள்ள நிலையில், அவை ரோட்டின் ஓரங்களில் சாதாரணமாக நடமாடுகின்றன.

தவிர மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் மிகவும் பிரபலமான படையப்பா, ஒற்றை தந்தம் ஆகிய ஆண் காட்டு யானைகள், கல்லார் எஸ்டேட் பகுதியில் நாள் கணக்கில் முகாமிடுவது வழக்கம்.

கடந்த 2 மாதங்களாக படையப்பா குண்டளை, அருவிக்காடு, செண்டுவாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ள நிலையில் ஒற்றை தந்தம் கொண்ட யானை அவ்வப்போது கல்லார் எஸ்டேட் பகுதிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளது.

நல்லதண்ணி எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் தீவனத்தை தேடி வரும் ஒன்றை தந்தம் யானை கல்லார் எஸ்டேட் வரை நடமாடுவதுடன் பகல் வேளையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகிறது.

அந்த யானை கடந்த ஒரு வாரமாக கல்லார் எஸ்டேட் பகுதியில் நடமாடுகின்றது. அப்பகுதியில் காட்டு மாடு, யானை உள்பட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்ததால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us