sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்குவதாக அழைப்பு: வீடு, வீடாக ஆசிரியர் நோட்டீஸ் வினியோகம்

/

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்குவதாக அழைப்பு: வீடு, வீடாக ஆசிரியர் நோட்டீஸ் வினியோகம்

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்குவதாக அழைப்பு: வீடு, வீடாக ஆசிரியர் நோட்டீஸ் வினியோகம்

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்குவதாக அழைப்பு: வீடு, வீடாக ஆசிரியர் நோட்டீஸ் வினியோகம்


ADDED : ஜூலை 02, 2024 05:26 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.300 வங்கி கணக்கில் செலுத்துவதாக ஆசிரியர் அறிவிப்பு செய்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் இலவச கல்வி, சீரூடை, புத்தகம், கல்வி உதவித்தொகை, சைக்கிள், காலணி, உணவு, லேப்டாப் என பல பொருட்கள் இலவசமாக கொடுத்தாலும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

கம்பம் அருகே ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம் கிராமங்களில் உள்ள கள்ளர் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களே இல்லை. ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். சமீபத்தில் அணைப்பட்டி பள்ளிக்கு மாறுதலாகி வந்த ஆசிரியர் சுந்தர் மாணவர்களே இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து சேர்க்கைக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் வங்கி கணத்தில் ரூ.300 செலுத்தப்படும். பள்ளிக்கு வந்து செல்ல ஆட்டோ ஏற்பாடு செய்து தரப்படும்.

எளிதாக குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச உத்தரவாதம் தரப்படும் என துண்டு பிரசுரம் பிரிண்ட் செய்து வீடு வீடாக கொடுத்தும், ஆட்டோவில் பிரசாரமும் செய்கிறார்.

சுந்தர் கூறுகையில், பள்ளி வரும் குழந்தைகளுக்கு எனது சொந்த பணம் ரூ.300 வங்கியில் செலுத்துகிறேன் என கூறியுள்ளேன். இருப்பினும் மாணவர் சேர்க்கை இல்லை' என்றார்.






      Dinamalar
      Follow us