sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இரவிகுளம் தேசிய பூங்கா ஏப்.,1ல் திறக்க வாய்ப்பு

/

இரவிகுளம் தேசிய பூங்கா ஏப்.,1ல் திறக்க வாய்ப்பு

இரவிகுளம் தேசிய பூங்கா ஏப்.,1ல் திறக்க வாய்ப்பு

இரவிகுளம் தேசிய பூங்கா ஏப்.,1ல் திறக்க வாய்ப்பு


ADDED : மார் 24, 2024 05:42 AM

Google News

ADDED : மார் 24, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : வரையாடுகளின் பிரசவம் நிறைவுக்கு வரும் தருவாயில் உள்ளதால் இரவிகுளம் தேசிய பூங்கா ஏப். ஒன்றில் திறக்க வாய்ப்புள்ளது.

மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கின்றனர். ஆண்டுதோறும் வரையாடுகளின் பிரவசம் பிப்.,துவங்கி மார்ச் இறுதி வரை நீடிக்கும். அப்போது இரவிகுளம் தேசிய பூங்கா மூடப்பட்டு ராஜமலைக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்படும்.

அதன்படி கடந்த பிப்., ஒன்றில் பூங்கா மூடப்பட்டு மார்ச் 31 வரை பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது வரையாடுகளின் பிரசவம் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதால் இரவிகுளம் தேசிய பூங்கா ஏப்., ஒன்றில் திறக்க வாய்ப்புள்ளது.

பூங்காவில் காற்றுமலை, புலாமலை, இரவிகுளம் ஹட் (கேம்ப் மலை), ராஜமலை ஆகிய பகுதிகளில் குட்டிகள் அதிகமாக காணப்பட்டன. நூற்றுக்கும் அதிகமாக குட்டிகள் பிறந்திருக்க வாய்ப்புள்ளதாக வனத்துறை காவலர்களின் கண்காணிப்பில் தெரியவந்தது.

தேசிய பூங்காவில் கடந்தாண்டு புதிதாக பிறந்த 128 குட்டிகள் உள்பட 803 வரையாடுகள் உள்ளதாக வனத்துறை நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us