sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மேகமலை பகுதியில் சாரல் சுருளி அருவியில் 'ஜில்' நீர்

/

மேகமலை பகுதியில் சாரல் சுருளி அருவியில் 'ஜில்' நீர்

மேகமலை பகுதியில் சாரல் சுருளி அருவியில் 'ஜில்' நீர்

மேகமலை பகுதியில் சாரல் சுருளி அருவியில் 'ஜில்' நீர்


ADDED : மே 16, 2024 02:07 AM

Google News

ADDED : மே 16, 2024 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:மேகமலை பகுதியில், ஒரு வாரமாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், சுருளி அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுருளி அருவி முக்கியமானதாகும். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதாலும், அருவிக்கு வரும் தண்ணீர் உயரமான மலையிலிருந்து பல்வேறு மூலிகை செடிகள், மரங்கள் மீது பட்டு வருகிறது.

இதனால், அருவி தண்ணீரானது தீராத நோய்களையும் தீர்க்கும் என்பது ஐதீகம். எனவே, ஆண்டு முழுதும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணியர் இங்கு குளிக்க வருகின்றனர்.

பொதுவாக கோடையில் அருவியில் தண்ணீர் இருக்காது. வறண்டு போகும். இந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்து அருவிக்கு தண்ணீர் வரத்து இல்லை.

ஒரு வாரமாக மேகமலை பகுதியில் குறிப்பாக இரவங்கலாறு பகுதியில் தொடர்ந்து சாரல் பெய்து வருவதால், அருவிக்கு தண்ணீர் வரத்து நேற்று முன்தினம் மதியம் முதல் ஆரம்பமானது.

நேற்று காலையில் போதிய அளவு தண்ணீர் வருகிறது. சுற்றுலாப் பயணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us