sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல மறுக்கும் அரசு பஸ்களால் கூடலுார் பயணிகள் பாதிப்பு

/

கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல மறுக்கும் அரசு பஸ்களால் கூடலுார் பயணிகள் பாதிப்பு

கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல மறுக்கும் அரசு பஸ்களால் கூடலுார் பயணிகள் பாதிப்பு

கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல மறுக்கும் அரசு பஸ்களால் கூடலுார் பயணிகள் பாதிப்பு


ADDED : ஆக 10, 2024 06:23 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : குமுளியிலிருந்து தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாலை 6:00 மணிக்கு மேல் குமுளியில் இருந்து கூடலுார், கம்பம் வழியாக செல்லும் அதிகமான அரசு பஸ்கள் கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதில்லை. இதனால் பஸ் கண்டக்டர்களுக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

இரவு 8.30 மணிக்கு மேல் கம்பத்தில் இருந்து கூடலுார் வருவதற்கு கூடுதல் பஸ் வசதி இல்லை. கம்பம் பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதேபோல் குமுளியில் இருந்து கூடலுார் வழியாக தேனி, திருநெல்வேலி செல்லும் பல அரசு பஸ்கள் கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதில்லை. இது குறித்து பயணிகள் கேட்டால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடுவழியில் இறக்கி விட்டு விடுகின்றனர்.

கம்பம் அரசு விரைவு பேருந்தில் முன்பதிவு செய்த கூடலுார் பயணிகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கூடலுாரில் புறவழிச் சாலை அமைக்கப்பட்ட பின் ஏராளமான தொலைதூர பஸ்கள் கூடலுார் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக சென்று விடுகின்றன.

இதனால் பயணிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து அதிகாரிகள் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அனைத்து பஸ்களும் கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வரவும், தொலைதூர பஸ்கள் கூடலுார் பஸ் ஸ்டாண்டிற்கு வராமல் புறவழிச் சாலை வழியாக செல்வதை தடுக்கவும் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us