ADDED : ஏப் 17, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு,: மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் முதுவான் பாறை பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் சிறுத்தை பூனை இறந்த நிலையில் கிடந்தது. அதனை நேற்று காலை பார்த்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மூணாறு வனத்துறையினர் சிறுத்தை பூனையின் உடலை கைப்பற்றி கொண்டு சென்றனர்.
சிறுத்தை பூனை இரவில் ரோட்டில் நடமாடியபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

