ADDED : ஆக 09, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி நகராட்சி காலனியை சேர்ந்தவர்கள் காளிமுத்து 27. கருப்பையா 38. உருமிக்காரன் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் 25. மூவரும் அனுமதி இன்றி மது பாட்டில்களை வாங்கி வெளியில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல விற்பனைக்காக மது பாட்டில்களை வாங்கி வந்துள்ளனர். போடி டவுன் போலீசார் மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.