ADDED : மார் 02, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று முன்தினம் திருவிழாவிற்கு வந்தவர்கள் ஊருக்கு செல்வதற்கு அரசு டவுன் பஸ்ஸில் வத்தலக்குண்டு சென்று கொண்டிருந்தனர்.
நிலக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் துரைப்பாண்டி 49. ஓட்டினார். காட்ரோடு அருகே பஸ் செல்லும் போது முன்னாள் டூவீலரில் சென்றவர் பஸ் மீது கல் எறிந்ததில் முன் பக்க கண்ணாடி உடைந்தது.
கல் எறிந்து தப்பியவரை தேவதானப்பட்டி போலீசார் தேடினர். இந்நிலையில் தேவதானப்பட்டி சாவடிதெருவைச் சேர்ந்த வீரா 21. கல் எறிந்து கண்ணாடியை உடைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. சேத மதிப்பு ரூ.25 ஆயிரம். தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை, வீராவை கைது செய்தார்.