ADDED : ஆக 23, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு எஸ்.ஐ., சுகுமாறன் தலைமையிலான போலீசார் வீரபாண்டி மயானபகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வீரபாண்டி கிழக்குத்தெரு பொன்னுச்சாமி 23, என்பவரை சோதித்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தார்.
இவரை கைது செய்து விசாரணையில் கஞ்சா பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருப்பதாகவும், இதனை கம்பத்தை சேர்ந்த செல்வத்திடம் வாங்கி, விற்றதாக தெரிவித்தார்.
இதனால் கஞ்சா விற்ற பொன்னுச்சாமி, அவருக்கு சப்ளை செய்த கம்பத்தை சேர்ந்த செல்வம் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

