நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சங்கம், கம்பம் பிளஸ் ஆல் அறக்கட்டளை, திருச்சி ராயல் கேர் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில் டாக்டர் ஜானகிராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
காதில் சீழ் வடிதல், தைராய்டு பிரச்னை, குழந்தைகளுக்கு காது கேட்காத பிரச்சனை, சைனஸ்ஆகியவை குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வ.உ.சி., சங்கத் தலைவர் வீரபத்திரன், செயலாளர் காளிமுத்து ராஜா, பிளஸ் ஆல் அறக்கட்டளை தலைவர் பார்த்திபன், மேலாளர் நந்தகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.